திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16854) இன்று பிற்பகல் 12.45 மணிக்கு சிதம்பரம் அருகே உசுப்பூர் ரயில்வே கேட் அருகே என்ஜின் பழுதாகி நின்றது. அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16853) சிதம்பரம் ரயில்நிலையத்திற்கு பிற்பகல் 1.25 மணிக்கு வந்து 2-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது. அந்த ரயிலின் என்ஜினை கழற்றிச் சென்று பொருத்தி திருச்சி-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை 2.10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்னை சென்றது. பின்னர் மயிலாடுதுறையிலிருந்து வேறு என்ஜின் வரவழைக்கப்பட்டு அந்த என்ஜினை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்து சென்னை-திருட்டி செல்லும் ரயிலில் பொருத்தி அந்த ரயில் பிற்பகல் 2.20 மணிக்கு திருச்சி நோக்கி சென்றது. என்ஜின் பழுதாகி நின்றதால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அவதியுற்றனர். இதனால் திருச்சி-சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகவும், சென்னை-திருச்சி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவும் சென்றது.