சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் ஏஎஸ்பி அதரடிப்படையினர் கடந்த டிச.24-ம் தேதி 2 சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 7 போலீஸார் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான வெற்றிச்செல்வன் (28) என்பவரை தேடி சிவசண்முகம்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வெற்றிச்செல்வன் பீர்பாட்டில் மற்றும் அரிவாள்மனையால் போலீஸாரை தாக்கிவிட்டு தலைமறைவானார். இதில் நேரு, குமரேசன் ஆகிய இரு போலீஸார் காயமடைந்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து வெற்றிச்செல்வனை தேடி வந்தனர். இந்நிலையில் வெற்றிச்செல்வன் சிதம்பரம் நம்பர்-1 மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் கடந்த டிச.11-ம் தேதி நீதிபதி பாக்கியம் முன்னிலையில் சரணடைந்தார்.