கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொங்கல் விளையாட்டு போட்டி: ரகளையில் ஈடுபட்ட போலீஸார் இருவர் உள்பட 6 பேர் கைது

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பொங்கல் விளையாட்டு போட்டியில் ரகளையில் ஈடுபட்ட போலீஸார் இருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :17 ஜனவரி 2013, 12:38 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பொங்கல் விளையாட்டு போட்டியில் ரகளையில் ஈடுபட்ட போலீஸார் இருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேத்தியாத்தோப்பு அருகே பு.உடையூரில் புதன்கிழமை காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்பகுதியைச் சேர்ந்த அச்சுதராஜ், பாக்கியராஜ் ஆகியோர் போட்டியை கான வெளியீரில் உள்ள தனது நண்பர்களை அழைத்திருந்தனர். சேத்தியாத்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த போலீஸார் ராஜேஷ் (24), வேலு (23) நற்றும் அவலூரைச் சேர்ந்த தர்மராஜ் (24), பைரவிராஜ் (28), சென்னிநத்தத்தைச் சேர்ந்த பிரபாகரன் (24), கோதண்டவிளாகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (24) ஆகியோர் ஒரு மினிவேனில் புடையூருக்கு போட்டியை காணச் சென்றனர்.

போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அச்சுதராஜ் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அச்சுதராஜ் நணபர்கள் வந்த மினிவேனை அடித்து நொறுக்கினர்.

இதனையடுத்து ஊர்மக்கள் தார்பில் சோழத்தரம் போலீஸார் ரகளையில் ஈடுபட்ட அச்சுதராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் சோழத்தகம் போலீஸார் அமைதிபங்கம் விளைவித்து ரகளையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து போலீஸ்காரர்கள் ராஜேஷ், வேலு, தர்மராஜ், பைரவிராஜ், பிரபாகரன், ராஜ்குமார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். மேலும் அச்சுதராஜ், பாக்கியராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.