அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வத்திராயிருப்பில் பள்ளிக்கு சென்ற ஆசிரியையை காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பள்ளிக்கு வேலைக்குச் சென்ற பட்டதாரி ஆசிரியையை காணவில்லை என அவரது தாய் போலீஸில் புகார் செய்துள்ளார்.

News image
Updated On :18 ஜனவரி 2013, 3:22 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பள்ளிக்கு வேலைக்குச் சென்ற பட்டதாரி ஆசிரியையை காணவில்லை என அவரது தாய் போலீஸில் புகார் செய்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கு என உண்டு உறைவிடப் பள்ளி வத்திராயிருப்பில் செயல்பட்டு வருகிறது. இதனை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் நடத்துகிறார்கள். இவர்களுக்கு முழு செலவையும் அனைவருக்கும் கல்வி இயக்கம் கொடுத்து வருகிறது.

இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் நத்தம்பட்டி கீழூரைச் சேர்ந்த காமாட்சி மகள் காஞ்சனாதேவி என்ற பி.எஸ்ஸி., பி.எட்., படித்து முடித்தவர் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார்.

இம் மாதம் 12-ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையாம்.

இது குறித்து அவரது தாய் மீனா (55), நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் தலைமறைவான காஞ்சனாதேவியை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.