அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேரூராட்சிகளின் குடிநீர் தேவைக்கு முதல்வர் தனிக்கவனம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தமிழ்நாட்டிலேயே இரு பேரூராட்சிகளில் பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மம்சாபுரம் பேரூராட்சியும் ஒன்று. தற்போது இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுள்ளது. பைப்லைன் போடவேண்டியுள்ளது. இதற்கும் அரசு உதவும். எல்லோரும் போற்றும்

News image
Updated On :25 ஜனவரி 2013, 11:21 am

கோ.ஜெயக்குமார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பேரூராட்சிகளின் குடிநீர் தேவைக்கு உயர் முன்னுரிமை அளித்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் என்று செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்தரபாலாஜி கூறினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பேரூராட்சி அலுவலக கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில் கூறியதாவது:

தமிழ்நாட்டிலேயே இரு பேரூராட்சிகளில் பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மம்சாபுரம் பேரூராட்சியும் ஒன்று. தற்போது இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுள்ளது. பைப்லைன் போடவேண்டியுள்ளது. இதற்கும் அரசு உதவும். எல்லோரும் போற்றும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் 7 பேரூராட்சிகள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஊராட்சி பகுதிகளின் குடிநீர் திட்டங்களுக்கு ரூ.200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி, நெல்லை மாவட்டம் முக்கூடலில் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் போர்வெல் அமைத்து குடிநீர் கொண்டுவர டெண்டர் விட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளை அறிந்து அனைவரும் பயன்பெறும் வகையில் எல்லோரும் போற்றும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசு எல்லா வகையிலும் தமிழர்களையும், தமிழகத்தையும் வஞ்சித்து வநதாலும், தமிழக மக்கள் செல்வாக்குடன், உங்கள் பலத்துடன் முதல்வர் அனைத்து தேவைகளையும் தமிழகத்திற்கும், மக்களுக்கும் பெற்றுத்தருவார், தந்துகொண்டே இருப்பார் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.