கோயிலின் உள்ளே சிவகங்கை குளம், சிவசக்தி வடிவமாக கருத்தப்படும் பரமானந்த கூடமும் உள்ளது. நகரில் இளமையாக்கினார் கோயில் குளம், ஞானப்பிரகாசர் குளம், அனந்தீஸ்வரர் கோயில் வியாக்கிரபாதர் தீர்த்த குளம், நாகச்சேரி குளம், ஓமக்குளம், திருப்பாற்கடல் குளம், சிவப்பிரியை குளம், ஆயிகுளம், பிரம்மதீர்த்தம், புலிச்சமேடு ஆகிய தீர்த்த குளங்கள் உள்ளன. இவையல்லாமல் நகரின் மையப்பகுதியில் ஓடும் பாலமான் ஆறு தற்போது தூர்ந்துபோய் அகலம் குறைந்து வெறும் ஆறு அடி அகலத்தில் கூவமாக ஓடுகிறது. எனவே இந்த ஆறு, குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினருடன் ஒப்படைத்தால், அவற்றை எதிர்காலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், நீர் நிலைகளை பேணி பாதுகாக்கவும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக பராமரிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் மனுவில் தெரிவித்துள்ளனர்.