கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் ஏழைகளுக்கு உதவும் நிலையிலேயே உள்ளோம்: கருணாநிதி

முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்கக் காசுகள், ஏழை எளிய மக்கள் 3 ஆயிரம் பேருக்கு வேஷ்டி சேலைகள், மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கினார். அதன் பின்னர்

News image
Updated On :6 ஜூலை 2013, 8:49 am

ரவி

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் ஏழைகளுக்கு உதவ வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம் என்றார் கருணாநிதி.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள தன் தாயார் அஞ்சுகத்தம்மாளின் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் மு.கருணாநிதி. பின்னர் அவர், காட்டூரில் 10, 12ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்கக் காசுகள், ஏழை எளிய மக்கள் 3 ஆயிரம் பேருக்கு வேஷ்டி சேலைகள், மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கினார். அதன் பின்னர் பேசிய கருணாநிதி, நம் நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் ஏழை எளிய மக்களுக்கு இல்லாமை, இயலாமை, வறுமையை ஒழிக்க மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம்.

வறுமையை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எங்களைப் போன்ற எதிர்க் கட்சிகளும் ஏழை எளிய மக்களின் தேவை உணர்ந்து வழங்கி வருகிறோம் என்று கூறினார் கருணாநிதி.

இந்தக் கூட்டத்தில், டி.ஆர்.பாலு., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஏ.வ.வேலு, பொன்முடி, மதிவாணன், அழகு திருநாவுக்கரசு, நாகை எம்பி விஜயன், மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட திமுக தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.