இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மற்ற மாநில முதல்வர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுபவர் ஜெயலலிதா: அமைச்சர் எம்.ஜி.சம்பத்

சிதம்பரம் தெற்குரதவீதியில் கடலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா இன்று

News image
Updated On :6 ஜூலை 2013, 8:41 am

G.Sundararaj

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி மற்ற மாநில முதல்வர்களுக்கு வழிகாட்டியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளார் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

சிதம்பரம் தெற்குரதவீதியில் கடலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது. மாவட்ட பேரவைத் தலைவர் எம்.உமாமகேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் வரவேற்றார். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியது: மாற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகஅரசு தலைசிறந்த அரசாகவும், தொலைநோக்கு பார்வை கொண்ட அரசாகவும் உள்ளது. மற்ற மாநில முதல்வர்கள் செய்ய முடியாத பல்வேறு சாதனைகளை ஜெயலலிதா இரண்டாண்டில் செய்துள்ளார். அச்சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல கட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று இந்த துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

விழாவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழக வாரியத் தலைவரும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளகருமான ஏ.அருண்மொழிதேவன், முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), முன்னாள் நகரமன்றத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலாளர் சொ.ஜவகர், நகர அவைத்தலைவர் எம்.யேசுராஜ், தலைமைக்கழக பேச்சாளர்கள் தில்லைகோபி, தில்லைசெல்வம், தில்லை ஏ.கே.எஸ்.சேகர், சி.கே.சுரேஷ்பாபு, டேங்க் ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் நகர பேரவைச் செயலாளர் கே.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.