இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஸ்ரீமுஷ்ணத்தில் மதுப்பாட்டில்களால் குத்தி விதவை பெண் கொலை!

ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கலிசாமேரி (45). இவரது கணவர் ஜான்பீட்டர் இறந்துவிட்டதால் கலிசாமேரி தனியாக வசித்து வந்தார். விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் வீட்டின்

News image
Updated On :6 ஜூலை 2013, 12:48 pm

G.Sundararaj

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை என்ற கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் விதவை பெண்மணி ஒருவர் வாய் மற்றும் மர்ம உறுப்புகளில் மதுபாட்டில்களால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கலிசாமேரி (45). இவரது கணவர் ஜான்பீட்டர் இறந்துவிட்டதால் கலிசாமேரி தனியாக வசித்து வந்தார். விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் வீட்டின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் வாய் மற்றும் மர்ம உறுப்புகளில் மதுபாட்டில்களால் குத்திக் கொலை செய்யப்பட்டு இன்று காலை இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தேச்சியாத்தோப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலிசாமேரி மர்ம கும்பலால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.