இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தமிழகத்திற்கு வரும் எந்த நன்மையையும் கருணாநிதி எதிர்க்க மாட்டார்: கனிமொழி எம்பி

இந்த ஆர்ப்பாட்டம் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி ஆணைப்படி பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. எங்களது கோரிக்கை சேது சமுத்திர கால்வாய் திட்டம்

News image
Updated On :8 ஜூலை 2013, 9:58 am

G.Sundararaj

நெய்வேலி நிலக்கரி நிறுவன 5 சதவீத பங்கினை தமிழகஅரசுக்கு வழங்கினால் வரவேற்போம். தமிழகத்திற்கு வரும் எந்த நன்மையையும். யார் முன்னெடுத்து சென்றாலும் திமுக தலைவர் கருணாநிதி எதிர்க்க மாட்டார். இதனை அவரது கடிதத்தில் இன்றைய முதல்வரை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.

கடலூரில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை வலியுறுத்தி கடலூர் மாவட்ட திமுக சார்பி்ல் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கனிமொழி எம்பி செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:

இந்த ஆர்ப்பாட்டம் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி ஆணைப்படி பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. எங்களது கோரிக்கை சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழகத்திற்கு வரக்கூடிய அத்தனை வளமங்களும் இத்திட்டத்தின் மூலம் வர வேண்டும். இதனை எதிர்க்கக்கூடிய அத்தனை பேரையும் இந்த ஆர்ப்பாட்டத்தின் வழியாக கண்டிக்கிறோம். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போகக்கூடிய கப்பல்கள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி ஏற்படும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நிச்சயமாக இலங்கை அரசு இந்திய நாட்டின் தயவை எதிர்பார்க்கும் நிலை இருக்கும் போது நமது கோரிக்கைகளையும், உணர்வுகளையும் நிச்சயம் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்றார் கனிமொழி. திமுக, அதிமுக ரகசிய உடன்பாடு என விஜயகாந்த் கூறியது குறித்து கேட்ட போது அந்த உடன்பாடு பற்றி தெரியாது. அதற்குள் போகவும் விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது கடலூர் மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.