தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆசைதம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். வாலிபர் தீவைத்து இறந்து கிடந்த இடத்தின் அருகே பீர்பாட்டில்கள், காலணிகள் கிடந்தது. விழுப்புரத்திலிருந்து தடயஅறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இறந்த போன வாலிபர் 3 தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டு, தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.