பின்னர் அவர் சித்சபை மீது ஏறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ஸ்ரீநடராஜமூர்த்தியை தரிசனம் செய்தார். பொதுதீட்சிதர்கள் சிறப்பு தீபாராதனை செய்து நீதிபதிக்கு பட்டு போர்த்தி பிரசாதத்தை வழங்கினர். பின்னர் அவர் தில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார். கோயிலுக்கு வந்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வாலை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஆர்.ராதிகா, வட்டாட்சியர் எம்.விஜயா, சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், கோயில் செயல்அலுவலர் கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் வரவேற்றனர்.