சிதம்பரம் அருகே உள்ள சித்தேரி கிராமத்தில் கிருபானந்தம் என்பவரது வீட்டில் சமையல் செய்யும் போது கூரையில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. பலத்த காற்று வீசியதால் தீ மள, மளவென பரவி அருகாமையிலிருந்த செல்வம், ரவி, ராயர், ஆதிவராகன், மணிமுத்து, பழனிசாமி, ராமானுஜம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது வீடுகளும் எரிந்து சேதமுற்றன. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இத்தீவிபத்தில் 10 வீடுகளிலும் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமுற்றன.