விருதுநகரில் நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.71 ஆயிரம் மோசடி செய்தவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் அழகுமுத்து(45). இதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி(46) என்பவரின் நிலத்தை வாங்கியுள்ளார். இதற்காக, ரூ.50 ஆயிரம் முன்பணமாக கொடுத்துள்ளார். அதையடுத்து, பத்திர பதிவு அலுவலகத்தில் ஒப்பந்த பத்திரம் தயார் செய்து கொடுத்ததோடு, குறிப்பிட்ட நாளில் முழுத்தொகையும் கொடுத்து கிரையம் செய்து தருவதாகவும் உறுதி கூறியுள்ளார். அப்போது, பதிவுக்கு அழைக்கும் போது உடனே ரூ.20 ஆயிரம் கேட்ட நிலையில் கொடுத்துள்ளார். இந்த நிலையில் பதிவு செய்வதற்கு வராமலும், பணத்தை திரும்ப கேட்டாலும் தாமதம் செய்ததோடு, ஏமாற்றியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் அழகுமுத்து புகார் செய்தார். அதன் பேரில் ரூ.71 ஆயிரம் மோசடி செய்த அழகர்சாமி மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.