வழக்குரைஞர்கள் - காவல் துறையோடு பிரச்னையில் ஈடுபட்டு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை இனி வருங்காலங்களில் தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் அறிவுரை வழங்கினார்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகில் நீதிமன்ற வளாகத்தில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் தொடக்க விழா வழக்குரைஞர் சங்க அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் பங்கேற்று பேசியதாவது: விருதுநகர் என்றாலே எளிமையான வாழ்ககை நடத்திய பெருந்தலைவர் காமராஜரின் நினைவு வரும். அவர் பிறந்த ஊரில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக விழா நடைபெறும் போது எல்லோரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள். ஆனால், இந்த நீதிமன்றம் குற்றங்களை குறைப்பதற்காக திறக்கப்படும் நீதிமன்றம் ஆகும்.
எந்த நோக்கத்திற்காக இந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளதோ, அந்த நோக்கம் நிறைவேற வேண்டும். காவல் துறையினரும் இதுவரையில் நில அபகரிப்பு மனுக்கள் மீது விசாரணை செய்து நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ள காவல் துறையின் பணியை பாராட்டுகிறேன். பொதுவாக பட்டா, சிட்டா, அடங்கல், பத்திரம் அடங்கிய ஆவணங்கள் இருந்தால் தான் உரிமை கொண்டாட முடியும். ஆனால், ஒரு சிலர் மற்றவர்களின் இடங்களை அனுபவித்து, அதன் காரணமாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதுபோன்ற இடங்களின் மதிப்பு கூடும் பொழுதுதான் குற்ற நடவடிக்கை ஏற்படுகிறது. இதுபோன்ற வழக்குகளை முழுமையாக விசாரித்து நடுநிலைமையுடன் தீர்ப்பு வழங்க வேண்டும்.
நில அபகரிப்பு பிரிவு தொடங்கியது முதல் இதுவரையில் காவல் துறை மூலம் ரூ. 13.15 கோடி நிலங்கள் மீட்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். 20 சதவீதம் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளதால் விசாரணை செய்ய முடியாத நிலையிருக்கிறது. மேலும், வழக்குரைஞர்கள் அனைவரும் தங்கள் வாதத்திறமைகளை நீதிமன்றத்தில் தான் நிலை நிறுத்த வேண்டும். அதை தவிர்த்து காவல் துறையின் காவலர்கள் மத்தியில் வாதத்திறமையை காட்டுவது முறையானது அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் காவல் துறைக்கும் -நீதித்துறைக்கும் ஒரு சில நேரங்களில் மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதையே காரணமாக வைத்து நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், நீதி மன்ற நடவடிக்கைகள் மற்றும் நடுவர்களின் வழக்கு விசாரணை இலக்குகள், கட்சிக்காரர்கள் ஆகியோர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், இனி வருங்காலங்களில் வழக்குரைஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிா்பாா்ப்புகள் என்ன? குறுந்தொழில்பேட்டைகள், காா் உற்பத்தி ஆலை

நெசவு தொழில் வளா்ச்சிக்கு முன்னுரிமை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்!

தொகுதி அலசல் திருமயம்! திமுக -அதிமுக கடும் போட்டி!

மணப்பாறை தொகுதி! தக்கவைக்க மமக கடும் முனைப்பு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

