காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குறுக்குடி கிராமம் புளியடித்தெருவில் கடந்த மூன்று தினங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக சமரசம் செய்ததை அடுத்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.