அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

10-ம் வகுப்பு தேர்வு: சிவபுரி அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவபுரி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டுதான் இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு 2012-

News image
Updated On :1 ஜூன் 2013, 11:35 am

G.Sundararaj

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவபுரி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டுதான் இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு 2012-13ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளியில் தேர்வு எழுதிய 15 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் குக்கிராமத்தில் உள்ள இந்த பள்ளியில் பயின்ற மாணவி பி.தேவிபாலா 441 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், எஸ்.அஞ்சு 413 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி என்.பாரதி 406 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கே.குமரவேல் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.