தகவல் அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தா.சோ. பேட்டை கிராமத்திற்கு நேரில் சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த மதியழகன், கல்யாணசுந்தரம் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து முதல்வரை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்தை விளக்கி சிறப்பு நிதி பெற்று தர முயற்ச்சி செய்கிறேன் என்றும், தற்போது மீனவ நல வாரியத்தில் இருந்து வர வேண்டிய தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்களிடம் தெரிவித்தார். கடலில் மூழ்கி உயிரிழந்த மதியழகனுக்கு முத்தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், நவின்(12) என்ற மகனும், நவீனா(7) மகளும் உள்ளனர். மறைந்த கல்யாணசுந்தரத்திற்கு நிர்மலா(39) என்ற மனைவியும் கனியழகன் (19),விஜய்(17),பொன்னி(14) என்ற மகன்களும் உள்ளனர்.