பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனா பணி நியமனம் செய்யப்பட்ட பின்னர் பல்கலைக்கழகத்தில் ஊழல் பெருச்சாளிகள் பணிநீக்கம், பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிர்வாகியின் தினசரி அதிரடி நடவடிக்கைகளினால் பொதுமக்களிடம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இடைத்தரகர்கள் மூலம் பல லட்சங்கள் முதல் கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்த முதுகலை மருத்துவப் படிப்பிற்கான அனுமதி சேர்க்கை தகுதி அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது மாணவர்களி்டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ள பல்கலை நிர்வாகி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறது என அறிக்கையில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.