கடந்த 2012ம் ஆண்டு ஆக.28ம் தேதி திருவண்ணாமலை காந்தி சிலை அருகே நடைபெற்ற விஜயகாந்தின் பிறந்த நாள் பொதுக்கூட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விஜயகாந்த் பேசியபோது, தமிழக அரசையும் முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக, இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜரானார் விஜயகாந்த். இந்த வழக்கு பின்னர் வரும் ஆக.12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே தான் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.