கடலூர் முதுநகரில் மக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.
கடலூர் முதுநகர் சிதம்பரம் சாலையில் மருத்துவமனை, கோயில், திருமண மண்டபம் மறறும் குடியிருப்பு பகுதியின் அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு சேவை மைய நிர்வாகிகள் செய்யது மொஹிதீன், பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கடலூர் மாவட்ட ஆட்சியர், கலால் உதவி இயக்குநர், டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு சேவை மையத்தினர் கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டது. இதையடுத்து மக்களை பாதிக்கக்கூடிய டாஸ்மாக் கடையை மூட அரசு உத்தரவிட்டது.
உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. இதன்மூலம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையும் முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பூர் மாவட்டத்தில் 2,822 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! தலைவர்கள் வாக்களித்தனர் - நேரலை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

