புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தருமபுரியில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த தம்பதி கைது

தருமபுரியில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :15 ஜூன் 2013, 6:32 am

முருகன்

தருமபுரியில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நக்சலைட் மற்றும் மவோயிடுகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நக்சலைட் தடுப்பு போலீசார் மற்றும் மாவட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

தருமபுரியில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தேகத்துக்கு இடமாக தருமபுரி அருகே கடயத்தூர் ரயில்வே கரை மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்கள், துறைசிங் வேலு (52), அவரது மனைவி பாரதி (44) என்பதும், அவர்கள் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், வெகு நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.