விருதுநகர் அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து திரி கட்டுக்களை கடத்தியதாக இருவரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே மத்தியசேனை-ஒண்டிப்புலிநாயக்கனூர் சாலையில் அடிக்கடி வாகனத்தில் அரசு அனுமதியின்றி கரிமருந்து திரிகட்டுக்களை கடத்திச் செல்வதாக ஆமத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சார்பு ஆய்வாளர் வீராச்சாமி தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை காலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி போலீஸார் ஆய்வு செய்தனர்.
அந்த வாகனங்களில் சாக்கு பைகளில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து கட்டுக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில் ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி(51), மற்றொருவர் சங்கலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவஜோதி(31) ஆகிய இருவரையும் ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர். அதோடு, இரு வாகனங்களையும், 60 குரோஸ் கரிமருந்து திரிக்கட்டுக்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

பிடிவாதம் தளர வேண்டும்!

எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

