அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கரிமருந்து திரி கட்டுக்களை கடத்திய இருவர் கைது

விருதுநகர் அருகே  பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து திரி கட்டுக்களை கடத்தியதாக இருவரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

Updated On :21 ஜூன் 2013, 11:49 am

விருதுநகர் அருகே  பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து திரி கட்டுக்களை கடத்தியதாக இருவரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே மத்தியசேனை-ஒண்டிப்புலிநாயக்கனூர் சாலையில் அடிக்கடி வாகனத்தில் அரசு அனுமதியின்றி கரிமருந்து திரிகட்டுக்களை கடத்திச் செல்வதாக ஆமத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சார்பு ஆய்வாளர் வீராச்சாமி தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை காலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி போலீஸார் ஆய்வு செய்தனர்.

   அந்த வாகனங்களில் சாக்கு பைகளில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து கட்டுக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில் ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி(51), மற்றொருவர் சங்கலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவஜோதி(31) ஆகிய இருவரையும் ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர். அதோடு, இரு வாகனங்களையும், 60 குரோஸ் கரிமருந்து திரிக்கட்டுக்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.