அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகை பறிப்பு

விருதுநகரில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கழுத்தில் கிடந்த 3 சவரன் நகை பறித்துச் சென்று தப்பியோடிய மர்ம நபர் குறித்து போலீஸார் தீவீரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On :21 ஜூன் 2013, 11:48 am

விருதுநகரில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கழுத்தில் கிடந்த 3 சவரன் நகை பறித்துச் சென்று தப்பியோடிய மர்ம நபர் குறித்து போலீஸார் தீவீரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

  இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் அருகே முத்துராமன்பட்டியில், சிவந்திபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் என்பவரின் மனைவி சந்திரா(57). இவர் கடைவீதியில் பொருள்கள் வாங்கிக் கொண்டு வெள்ளிக்கிழமை சத்தியமூர்த்தி சாலையில் தனியார் கண் மருத்துவமனை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவர் பின்னே 30 வயதுடைய மர்ம நபர் ஒருவர் நடந்து வேகமாக வந்து வழிமறித்து கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்தாராம். 

    பின்னர், சத்தம் போட்டதையடுத்து பொதுமக்கள் வந்து கூடி விரட்டியுள்ளனர். அப்போது மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பியோடினார். இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம் சந்திரா புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.