மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நிவாரணப் பணிகளை காங்கிரஸ் அரசியலாக்குகிறது: வெங்கய்ய நாயுடு

கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நிவாரணப் பணிகளைப்

News image
Updated On :26 ஜூன் 2013, 2:06 pm

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை காங்கிரஸ் கட்சி அரசியாக்கி வருவதாக பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டினார்.இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நிவாரணப் பணிகளைப் பார்வையிட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் சென்றதை காங்கிரஸ் எதிர்க்கிறது. இது என்ன காங்கிரசுக்கு சொந்தமான நாடா?நிவாரணப் பணிகளைக் கூட காங்கிரஸ் அரசியலாக்கி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயலற்றத் தன்மையால் நாட்டின் வளர்ச்சி குறைந்துகொண்டே வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், யாரும் கவலைப்பட வேண்டாம் என நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் அண்டை நாடுகளுடன் நல்லுறவு இல்லை. பயங்கரவாதச் செயல்கள் அன்றாட நிகழ்வுகளாகி விட்டது. காஷ்மீரில் 8 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அரசு கண்டனம் தெரிவிப்பதோடு நின்றுவிடுகிறது. இதனால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்துவிட்டது என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.