அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

இளம்பெண்ணை ஏமாற்றி 27 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ஏமாற்றி 27 சரவன் நகை மற்றும் ரூ.50 ஆயிரமும் பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்த கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On :27 ஜூன் 2013, 10:33 am

விருதுநகரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ஏமாற்றி 27 சரவன் நகை மற்றும் ரூ.50 ஆயிரமும் பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்த கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பி்ல கூறியதாவது: விருதுநகர் ஆத்துமேடு சிவந்திபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமியின் மகள் சரஸ்வதி(23). இவரும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகராஜன் மனைவியான பரமேஸ்வரி(40) இருவரும் தோழிகள் ஆவார்கள். இந்நிலையில் கடந்த 12.12.2011 அன்று பரமேஸ்வரி தனது குடும்பச் செலவிற்கு அவசரமாக ரூ.1 லட்சம் வரையிலான பணம் தேவைப்படுவதாக சரஸ்வதியிடும் தெரிவித்தாராம்.

அப்போது, உடன் அவரது கணவர் நாகராஜன் மற்றும் உறவினர் குணசேகரன் உள்ளிட்டோரும் உடன் வந்துள்ளனர். அப்போது, வீட்டில் எனது தாய் தந்தை இல்லை என்றுள்ளார். அதற்கு அவர்களிடம் நாங்கள் சொல்வதாக கூறியதை உண்மையென நம்பிய சரஸ்வதி தன்னிடம் 5 சவரன் நகை கொடுத்துள்ளார். இதேபோல், குடும்ப கஷ்டத்தை கூறி பல்வேறு தவனைகளில் 27 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளனர். அந்த நகையை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு அடகு வைத்து பில்லை கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

அதில், குணசேகரன் பேரில் அடகு வைத்துள்ளதாக கூறியும், எனது உறவினர்தான் எனவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் நகை மற்றும் பணத்தை  திருப்பித் தருமாறு பல்வேறு தடவை கேட்டாராம். ஆனால், அவர்கள் நகையை திருப்பி தரவில்லையாம். இனிமேல் பணம் நகை கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம். இது தொடர்பாக விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் புகார் செய்தார். அப்போது, இந்த வழக்கை விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவி்டடார். அதன் பேரி்ல் பரமேஸ்வரி, கணவர் நாகராஜன் மற்றும் உறவினர் குணசேகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.