அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பூங்காவிற்கு பெயர் வைப்பதில் போட்டி: திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

காட்டுமன்னார்கோயில் சந்தைதோப்பு அருகே பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு 2007-ல் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பெயர் வைப்பது என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

News image
Updated On :28 ஜூன் 2013, 12:44 pm

G.Sundararaj

காட்டுமன்னார்கோயிலில் பூங்கா ஒன்றிற்கு பெயர் வைப்பதில்  திமுக, அதிமுக இடையே போட்டியில் இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

காட்டுமன்னார்கோயில் சந்தைதோப்பு அருகே பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு 2007-ல் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பெயர் வைப்பது என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று பேரூராட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தாசன் (அதிமுக) தலைமையில் நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் 1-வது வார்டைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ரவி பூங்காவிற்கு எம்ஜிஆர் பெயர் வைப்பது என தீர்மானம் நிறைவேற்றி அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சுப்பிரமணியன், தாமோதரகண்ணன், மணிமாறன், மீனாராஜசேகர், கிருஷ்ணன் ஆகிய 5 பேர் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.