காட்டுமன்னார்கோயில் சந்தைதோப்பு அருகே பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு 2007-ல் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பெயர் வைப்பது என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று பேரூராட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தாசன் (அதிமுக) தலைமையில் நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் 1-வது வார்டைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ரவி பூங்காவிற்கு எம்ஜிஆர் பெயர் வைப்பது என தீர்மானம் நிறைவேற்றி அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சுப்பிரமணியன், தாமோதரகண்ணன், மணிமாறன், மீனாராஜசேகர், கிருஷ்ணன் ஆகிய 5 பேர் வெளிநடப்பு செய்தனர்.