கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 50 பேர் காயம்

திருவாரூர் அருகே அரசுப் பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 மாணவர்கள் உட்பட 50 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :28 ஜூன் 2013, 5:44 am

ரவி

திருவாரூர் அருகே அரசுப் பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 மாணவர்கள் உட்பட 50 பேர் காயமடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் களப்பாலில்  இருந்து  வெள்ளிக்கிழமை காலை திருத்துறைப்பூண்டிக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலைதடுமாறி சாலையோரம் இருந்த குளத்தில் விழுந்தது.

இதில், பேருந்தில் பயணம் செய்த 30 மாணவர்கள் உட்பட 50 பேர் காயமடைந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்தவர்களும், அப்பகுதி மக்களும் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

ஓட்டுநர் பாலு இந்தப் பேருந்தை ஓட்டி வந்தார். இந்த விபத்தில் 15 மாணவிகள் உள்பட 35 பேர் காயம் அடைந்தனர்.

இவர்களில் சாந்தி என்பவருக்கும் கர்ப்பிணியான சுமதி என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் திருவாரூர் மாவட்ட தலைமை மருத்துவமச்னையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட ஆட்சியர் நடராஜன், தாசில்தார் ராஜகோபால், டிஎஸ்பி அப்பாசாமி, எம்எல்ஏ உலகநாதன் ஆகியோர் பார்வையிட்டு காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

குளத்தில் மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என்பதால், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.