கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப் பூண்டி அருகே கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை

திருவாரூர்- திருத்துறைப்பூண்டி அருகே காடுவாகொத்தமங்கலம் கிராமத்தில் பவுல்ராஜ் என்பவரின் மகன் செந்தில் குமார் (30), அவரின் மனைவி கல்பனா (25)  இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

News image
Updated On :29 ஜூன் 2013, 11:29 am

ரவி

திருவாரூர்- திருத்துறைப்பூண்டி அருகே காடுவாகொத்தமங்கலம் கிராமத்தில் பவுல்ராஜ் என்பவரின் மகன் செந்தில் குமார் (30), அவரின் மனைவி கல்பனா (25)  இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

செந்தில்குமார் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். விடுமுறை தினங்களில் ஊருக்கு வருவாராம். அப்போது அடிக்கடி அவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று தகராறு அதிகரித்த நிலையில் இருவரும் விஷம் குடித்துள்ளனர். பின்னர் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்பனாவும், செந்தில்குமார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.