திருச்சி மாநகராட்சியில் இன்று ரூ. 18.36 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில், மேயர் ஏ. ஜெயா தலைமையில், ஆணையர் வே.ப. தண்டபாணி முன்னிலையில், நிதிக்குழுத் தலைவர் வி. ஐயப்பன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கூட்டம் துவங்கும் போதே திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விட்டனர். பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ரூ.31.50 கோடியில் புதிய விரிவடைந்த குடிநீர் திட்டம், ரூ.3 கோடியில் சென்னூர் அண்ணாநகரில் அறிவியல் பூங்கா, ரூ.1 கோடியில் வணிக வளாகம், பஞ்சப்பூர் என்ற பகுதியில் தண்ணீர் விளையாட்டு பொழுதுபோக்குப் பூங்கா, ரூ.75 லட்சத்தில் எரிவாயு தகன மேடை அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.