திருச்சியில் ராஜபக்ச உருவ பொம்மை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

திருச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்ச உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
Updated on
1 min read

திருச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்ச உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி பேருந்து நிலையம் அருகே கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இலங்கை அதிபர் ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்தனர். 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்த தீர்மானத்தை இந்தியா ஐ.நா. சபையில் முன்மொழிய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட  செயலாளர் க. அரசு, புறநகர் மாவட்ட செயலாளர் தமிழாதன் தலைமை தாங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com