டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருத்தம் கொண்டுவராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: கருணாநிதி எச்சரிக்கை

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால் மத்திய அமைச்சரவையில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:51 am

அரவிந்தன்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால் மத்திய அமைச்சரவையில் இருந்து மட்டுமல்ல, கூட்டணியில் இருந்தே வெளியேற வேண்டி வரும் என்று கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று இரவு பிரதமருக்கும், கூட்டணித் தலைவர் சோனியாவுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறினார். இன்று  செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, இந்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்; நீடிக்காது என்பது உறுதி என்றார்.

மேலும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியேறுவோம் என்று உறுதிபடத்  தெரிவித்தார்.

இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்ற திருத்தத்தை   தீர்மானத்தில் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திய கருணாநிதி, இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், அதுவும் குறுகிய கால வரம்புக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால் அது, இலங்கைத் தமிழருக்கு அநீதி இழைத்ததாகவே அமையும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.