சம்பவ இடத்திற்கு விரைந்த திருவள்ளூர் எஸ்.பி ரூபேஷ் குமார் மீனா இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கவரப்பேட்டை போலீஸார் தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(53), பாஸ்கர்(37), பெர்னாட்ஷா(55), கிருஷ்ணன்(45), செல்வம்(35), சூர்யா(30),பழனி(40), மாசிலாமணி(58), சேகர்(19), பிரரபாகர்(19), மோகன்ராஜ்(18), செளந்தர்ராஜ்(18), ராஜா(20) ஆகிய 13 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கோர்ட்டில் அடைத்தனர்.பா.ம.க தலைவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் இதுவரை 3 பஸ்கள் உடைக்கப்பட்டது, அதில் ஒரு பஸ் மீது பெட்ரோல் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில கும்பலால் நடத்தப்படும் இந்த சம்பவங்களால் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்க்ப்பட்டுள்ளதோடு இது குறித்து பொதுமக்கள் பெரும் அதிருப்தியிலும் உள்ளனர்.