பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சிதம்பரம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற ஒருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார்.

Updated On :12 மே 2013, 9:36 pm IST

சிதம்பரம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற ஒருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார்.

சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் காவல் சரகம் வேளங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம்பரிதி (32). இவர் மீது பஸ் மீது கல்வீசி தாக்கிய வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளது. இளம்பரிதி கடந்த மே 7-ம் தேதி புதுச்சத்திரம் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணுசாமியை அரிவாளால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தொடர் சம்பவங்களில் ஈடுபட்ட வந்த இளம்பரிதியை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா கோப்புகளை கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் இளம்பரிதியை ஓராண்டு சிறையிலடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.