கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஆற்றில் கார் கவிழந்து ஓட்டுநர் சாவு: 5 பேர் காயம்

திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் கார் கவிழ்ந்து விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார். இரு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்தனர்.

Updated On :12 மே 2013, 2:24 pm IST

திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் கார் கவிழ்ந்து விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார். இரு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்தனர்.

பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ஜோசப் (33). இவரது அம்மா ஜெபமாலைமேரி (58). ஜோசப் மனைவி குழந்தைத்தெரசா (29). குழந்தைகள் பிரான்சினா (5), ஜோனா (ஏழு மாத பெண் குழந்தை). குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்காக இவர்கள் அனைவரும் பெங்களூரிலிருந்து ஒரு காரில் வேளாங்கண்ணிக்கு வந்து கொண்டிருந்தனர். கார் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மடப்புரம் கிளரியம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து வெட்டாற் றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கார் ஓட்டுனர் பெங்களூரைச் சேர்ந்த தொப்ளான் மகன் சுப்பிரமணியன் (40) அதே இடத்தில் உயிரிழந்தார். ஜோசப், குழந்தைத்தெரசா உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.