அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

மக்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் நல்லாட்சியை நடத்த வேண்டும்: ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்

கர்நாடக மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் நல்லாட்சியை புதிய அரசு நடத்த வேண்டும் என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.

Updated On :12 மே 2013, 9:38 pm IST

கர்நாடக மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் நல்லாட்சியை புதிய அரசு நடத்த வேண்டும் என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று அரசு அமையவுள்ளது. மக்கள் அளித்த தீர்ப்பால் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த அரசிடம் மக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை வைத்துள்ளனர். மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் நல்லாட்சியை புதிய அரசு வழங்க வேண்டும். மக்களின் விருப்பங்களை அறிந்து, அதன்படி புதிய திட்டங்களை வகுத்து செயலாற்ற வேண்டும். சித்தராமையா தலைமையில் திங்கள்கிழமை புதிய அரசு அமையவுள்ளது. நல்லாட்சி நடத்துவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து சித்தராமையா சிறந்த ஆட்சியை தருவார் என்று நம்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.