டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி வண்டலூரில் பஸ் நிலையம் வருமா: கருணாநிதி

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும் வண்டலூர் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:45 am

அரவிந்தன்

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி வண்டலூரில் பஸ் வரப்போகிறதா என முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும் வண்டலூர் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.

இந்த பஸ் நிலையத்துக்கு வண்டலூர் பகுதி விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பு வந்தவுடன், வேளச்சேரியிலும், மாதவரத்திலும் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் என்னவாயிற்று என்று கேட்டிருந்தேன்.

இந்நிலையில் வேளச்சேரியில் வெளியூர் பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.1985-ம் ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்.அப்போது எம்.ஜி.ஆர்.,வண்டலூரில் சாலை விரிவாக்கத்துக்காகவும், உயிரியல் பூங்கா அமைக்கவும் பல ஏக்கர் நிலங்களை அரசு கையப்படுத்தியுள்ளது. இனி ஒரு நிலம்கூட வண்டலூரில் எடுக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.எனவே வண்டலூரில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி அங்கு புறநகர் பஸ் நிலையம் வரப் போகிறதா என்றும், வேளச்சேரி, மாதவரம் புறநகர் பஸ்நிலையங்கள் கதி என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.