தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

 தீயை அணைக்க முயன்ற முதியவர் தீ விபத்தில் சாவு

திருவள்ளூர் அருகே வயல் வெளியில் எரிந்துக் கொண்டிருந்த தீயை அணைக்க முயன்ற முதியவர் தீயில் காயம்பட்டு பலியானார்.

Updated On :24 மே 2013, 5:52 pm

திருவள்ளூர் அருகே வயல் வெளியில் எரிந்துக் கொண்டிருந்த தீயை அணைக்க முயன்ற முதியவர் தீயில் காயம்பட்டு பலியானார்.

 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பென்னாலூர்பேட்டை போலீஸ் எல்லைக்கு உள்பட்ட ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் செங்கல்வராயணின் மகன் முனுசாமி (68). இவர் புதன்கிழமை அன்று அவருக்குச் சொந்தமான வயல் வெளியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

 அப்போது அருகில் உள்ள நிலத்தில் தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. அந்த தீ நமது வைக்கோல் போரில் தீ பரவும் என பயந்து அந்த தீயை முனுசாமி அணைக்க முயன்றார். அப்போது அவரது உடலில் பலத்த தீ காயம் ஏற்பட்டது.

 அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக முனுசாமியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் முனுசாமி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் பாபு கொடுத்த புகாரின் பேரில் பென்னாலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.