கோயிலில் படைத்து விட்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்த போது சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் சாலையில் தவர்த்தாம்பட்டு அருகே கூத்தப்பெருமாள் கோயில் எனுமிடத்தில் சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி அதிவேகமாக வந்த மினிடெம்போ லாரி ஒன்று, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இவ்விபத்தில் மும்மூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இவரது மனைவி வெற்றிக்கொடி, மகன்கள் பாரதி, குருபிரசன்னா ஆகிய மூவரும் படுகாயமுற்று கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குமராட்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.