வெள்ளாற்றில் கடல் உப்புநீர் முகத்துவாரத்திலிருந்து சுமார் 15 கி.மீட்டர் வரை உட்புகுந்துவிட்டது. கீழமூங்கிலடி, புவனகிரி, வடஹரிராஜபுரம், சாக்காங்குடி, ஆயிப்பேட்டை வரை தினமும் கடல்நீர் உட்புகுதுவதும் வடிவதுமாய் உள்ளது. இதனால் அப்பகுதி ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக பாசனம் பெறும் வேளாண்மையும், மேல்நிலைத்தொட்டி மூலம் குடிநீர் பெறுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்த ஊர்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளும் பயனற்று போய்விடும். எனவே கொள்ளிடம் வடிநிலை கோட்ட பொதுப்பணித்துறையினர் வெள்ளாற்றின் குறுக்கே மேலமூங்கிலடிக்கு கிழக்கே ஒரு தடுப்பணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.