அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தேர்தல்: 11 பேர் வேட்புமனு தாக்கல்

சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்க 11 இயக்குநர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது. அதிமுக சார்பில் பா.மில்லர், உ.ராஜரத்தினம், ரா.கோவிந்தராஜன், ச.அஞ்சலி, இ.சத்தியா, ந.ஜெயந்தி, சா.நாராயணமூர்த்தி, த.

News image
Updated On :28 மே 2013, 9:28 am

G.Sundararaj

சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்க இயக்குநர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் 11 பேர் செவாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்க 11 இயக்குநர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது. அதிமுக சார்பில் பா.மில்லர், உ.ராஜரத்தினம், ரா.கோவிந்தராஜன், ச.அஞ்சலி, இ.சத்தியா, ந.ஜெயந்தி, சா.நாராயணமூர்த்தி, த.நாகராஜன், ச.வளர்மதி, சா.ஜெயபால், கே.டி.செல்வம் ஆகிய 11 பேர் தேர்தல் அதிகாரி துணைப் பதிவாளர் கமலக்கண்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 இயக்குநர்கள் பதவிக்கு 11 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலர் சொ.ஜவகர், பொதுக்குழு உறுப்பினர் தில்லை சேகர், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், தொகுதி துணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர பேரவைச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.