டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தேசிய நெடுஞ்சாலையில் உயர்மின் அழுத்த மின்கம்பத்தில் மோதிய லாரி: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை தாங்கி நிற்கும் மின்கம்பத்தில் இரும்பு தளவாட பொருட்களை

News image
Updated On :10 நவம்பர் 2013, 1:00 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை தாங்கி நிற்கும் மின்கம்பத்தில் இரும்பு தளவாட பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி மோதியதால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கர்நாடாக மாநிலம் மைசூரில் இருந்து சட்டீஸ்கர் மாநிலத்திற்கு நிலக்கரி தொழிற்சாலைக்கான இரும்பு தளவாட பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கும்மிடிப்பூண்டி வழியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றுக் கொண்டிருந்தது.இந்த லாரி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் ஆரம்பாக்கம் பகுதியில் மேம்பாலத்தில் வந்துக் கொண்டிருந்த போது சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்ற போது சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்பு சுவரில் அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பத்தின் மீது லாரியில் இருந்த தளவாட பொருட்கள் மோதியது.இந்த சம்பவத்தால் அந்த இரும்பு மின்கம்பம் வளைந்ததோடு அந்த மின்கம்பத்தின் வழியே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்ற உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

சம்பவம் அறிந்து அக்கம்பக்கத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் தரவே மின்வாரிய துறையினர் மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் உட்பட போலீஸôர் சம்பவ இடம் விரைந்து சாலையின் இருபக்கமும் போக்குவரத்தினை தடுத்து கார், பஸ் போன்ற வாகனங்களை மட்டும் சர்வீஸ் சாலையில் திருப்பி அனுப்பி கனரக வாகனங்களை சாலையில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மின்வாரிய அலுவலர்கள் விரைந்து வளைந்து நெளிந்த காணப்பட்ட மின்கம்பத்தை சரிசெய்து சாலையில் கைக்கு எட்டிய தொலைவில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்கம்பிகளை சீரமைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கிரேன் இயந்திரம் ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து வரவழைக்கப்பட்டு முறிந்து கிடந்த மின்கம்பம் ஓரளவு தூக்கி நிறுத்தப்பட்டு மின்கம்பிகள் தூக்கி கட்டப்பட்டது.இதனைத் தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீராக வாகனங்கள் அந்த சாலை வழியே அனுப்பப்பட்டது. ஆனாலும் ஆங்காங்கே பல இடங்களில் மின்கம்பிகள் பாதிக்கப்பட்டு இருந்ததால் அதனை மின்வாரிய துறையினர் சீரமைத்தனர். இதனை தொடர்ந்து காலை 5.30 மணி அளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் பகல் 12.30 மணி அளவில் சீரானது.

இந்த சம்பவத்தினால் இப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு 7 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இது தொடர்பாக மின்வாரிய துறையினர் அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கனரக லாரியின் டிரைவரான திண்டுக்கல் மல்லுமச்சம்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் தனசேகர்(24) ஆரம்பாக்கம் போலீஸôரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.