தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வயல்களில் பிடித்த மடையான்களை பறிமுதல் செய்த வனத்துறையினர்!

காட்டுமன்னார்கோயில் பகுதியில் கிராமப்புறங்களில் கொக்கு மற்றும் மடையான்களை பிடிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் சிதம்பரம் வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார்,

News image
Updated On :12 நவம்பர் 2013, 10:49 am

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே வயலில் பிடித்த மடையான்களை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

காட்டுமன்னார்கோயில் பகுதியில் கிராமப்புறங்களில் கொக்கு மற்றும் மடையான்களை பிடிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் சிதம்பரம் வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் மற்றும் களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுமன்னார்கோயில் அருகே வீரநத்தம் கிராமத்தில் சின்னையன் (50) என்பவர் வயல்வெளியில் வலை வைத்து இரண்டு மடையான்களை பிடித்த போது கையும், களவுமாக பிடிபட்டார். பின்னர் வனத்துறையினர் அவரிடமிருந்து இரண்டு மடையான்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். பின்னர் உயிருடன் இருந்த இரண்டு மடையான்களை வயல்வெளியில் பகுதியில் பாதுகாப்பாக பறக்கவிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.