பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கொடுமுடியாறு, அடவிநயினார் அணைகள் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையில் 2.4 மி.மீ மழையும், ராமநதி

News image
Updated On :17 நவம்பர் 2013, 1:46 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையில் 2.4 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 2 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 17 மி.மீ மழையும், பெருஞ்சாணி அணையில் 10.6 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 11.3 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 11.4 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 3 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 731.16 கனஅடி நீர்வரத்து இருந்தது. மழை காரணமாக மூடப்பட்டிருந்த பாபநாசம் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 105.97 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 67.75 அடியாகவும், கடனாநதி அணை நீர்மட்டம் 58.20 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 59.75 அடியாகவும் இருந்தது.

அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 83 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 106.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து 45 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 15.50 அடியாகவும், வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 9.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 47.57 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.