திருநெல்வேலி : நீர்பிடிப்பு பகுதியில் மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம்: பாபநாசம் அணையில் 28 மி,மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 10 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 19 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 6.2 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 33 மி.மீ மழையும், ராமநதி அணையில் 24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.









