எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பைக் மீது பஸ் மோதி ஒருவர் சாவு

வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மணிகண்டன்(25). இவரது தந்தை மாணிக்கம் கடந்த சில நாள்களுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது இறுதி காரியம்

News image
Updated On :24 நவம்பர் 2013, 1:54 pm

கணேஷ்கிரி

வந்தவாசி அருகே பைக் மீது தனியார் பஸ் மோதியதில் கட்டட மேஸ்திரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மணிகண்டன்(25). இவரது தந்தை மாணிக்கம் கடந்த சில நாள்களுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது இறுதி காரியம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தன. இதற்கான பொருள்கள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை மணிகண்டன் பைக்கில் வந்தவாசி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். கீழ்சீசமங்கலம் கூட்டுச்சாலையில் சென்றபோது வந்தவாசியிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கிச் சென்ற தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.