பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அம்பை அருகே மேலும் 3 ஆட்டுக்குட்டிகள் சாவு: கலக்கத்தில் விவசாயிகள்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் வெள்ளிக்கிழமை மேலும் 3 ஆட்டுக்குட்டிகள் இறந்தன. அடுத்தடுத்து இங்கு 30 க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் இறந்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

News image
Updated On :29 நவம்பர் 2013, 5:16 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் வெள்ளிக்கிழமை மேலும் 3 ஆட்டுக்குட்டிகள் இறந்தன. அடுத்தடுத்து இங்கு 30 க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் இறந்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 3.54 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதற்கிடையே திருநெல்வேலி அருகே சீவலப்பேரி அரியகுளத்தில் கிடையில் பட்டியில் அடைத்து வைத்திருந்த 28 ஆட்டுக்குட்டிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது.

இதையடுத்து அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் விவசாயிகள் வீடுகளில் வளர்த்து வந்த ஆடுகள், ஆட்டுக்குட்டிகள் அடுத்தடுத்து இறந்தது. 2 தினங்களுக்கு முன் விவசாயி முத்துராமனுக்கு சொந்தமான 3 ஆட்டுக்குட்டிகள் இறந்தன.

இதை தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி கால்நடை மருத்துவர் முத்துமாரி தலைமையில் மருத்துவக்குழுவினர் அங்கு சென்று விசாரணை நடத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். வியாழக்கிழமையும் அங்கு ஒரு ஆட்டுக்குட்டி இறந்தது. வெள்ளிக்கிழமை இப்பகுதியை சேர்ந்த முத்துராமன், ராமர், பெருமாள் ஆகியோருக்கு சொந்தமான 3 ஆட்டுக்குட்டிகள் இறந்தது. அடுத்தடுத்து 4 தினங்களில் வெள்ளங்குளியில் விவசாயிகள் வீடுகளில் வளர்த்து வந்த 30 க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் இறந்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.