ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கு: இளைஞர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம், காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருதன் மகன் பாண்டி (40). இவரும், இவரது தங்கை வெள்ளைத்தாயும், கான்சாபுரம் பள்ளர் சமுதாய சாவடி முன்பு நின்று கொண்டிருந்துள்ளார்கள்.








