பள்ளிகொண்டா அருகே 12 அடி நீள மலைப்பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளிகொண்டா அருகே பசுமாத்தூர் கிராமத்தில் சாலையோரம் சுமார் 12 அடி நிள மலைப்பாம்பு இருப்பதை அக்கிராம மக்கள் பள்ளிகொண்டாவில் உள்ள நியு வேல்ட் அனிமல் ரெஸ்கியூ அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவ்வமைப்பின் தலைவர் எஸ். சுகுமார், பொருளர் ஜெ. ஜெகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சென்று அதனை மீட்டு ஒடுக்கத்தூர் வனச்சரக வனவர் டி. சக்திவேல் மற்றும் வனத்துறை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.