சிதம்பரம் வாகீசநகர் நேருவீதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரது வீட்டின் பின்புறம் கூரை வீடு உள்ளது. இந்த கூரை வீட்டை பன்னீர்செல்வம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். பன்னீர்செல்வம் திருமண நிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்கார பொருள்கள் அங்கு வைத்து குடோனாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அலங்கார பொருள்கள் வைத்துள்ள குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இத்தீவிபத்தில் குடோனிலிருந்து திருமண நிகழ்ச்சிக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்புள்ள அலங்கார பொருள்கள் எரிந்து சேதமுற்றன. தீவிபத்து குறித்து சிதம்பரம் நகர போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.